ஆசை ஆசையாய் அதிகமாக விலைக் கொடுத்துவாங்கிய உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதாஅல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா?
கவலை வேண்டாம் இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்.மற்றொரு முறையிலும் இதனை அறியலாம் அது உங்கள் போனை திருப்பி பேட்டரியை கலற்றி படத்திலுள்ளவாறு அதனுள்ளே பார்க்கவும் அதில் IME எண் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.
இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
தம்பி நீங்கள் எழுதிய பதிவு அருமை நான் நீங்கள் குறிப்பிட்டcop@vsnl.net.ல் இதுவரை 3 கம்ளைண்ட் குடுத்து இருக்கேன் இதுவரை பதில் இல்லை .அவர்கள் எருமை மாட்டில் மழை பேஞ்சமாதிரி இருக்காய்ங்கோ ....திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை .......
ReplyDeleteவணக்கம் உடன்பிறவாச்சகோதரரே...
ReplyDeleteதாங்கள் எனது பார்வையிட்டதுக்கும் கருத்திட்டதுக்கும் நன்றி .
இந்த police காரங்களே இப்படித்தாம்ப்பா அறிவிப்ப மட்டும் விடுவாங்க ஆனா செயல்படுத்தமட்டும் மாட்டாங்க.